தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

0
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை என தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு:

தமிழர்களின் கலாச்சாரமாக காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது எனவும், காளை மாடுகளை வற்புறுத்தி தான் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை விதிக்க கூடாது எனவும், தமிழக அரசின் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு சட்டத்திற்கு எதிராக விலங்கு நல அமைப்புகள் கொடுத்துள்ள மனுக்களை விசாரிக்க கூடாது எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் – ஜூன் 5 முதல் விநியோகம்!

இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த பிறகு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை தள்ளி வைத்தது. இதன் பின்னர், விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் பேரில் கடந்த ஏழு நாட்களாக அரசியல் சாசன அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விரிவாக விசாரணை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்திருக்கிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!