
அட்ரா சக்க..!! ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும்..தமிழக முதல்வர் அறிவிப்பு..!! யாருக்கு தெரியுமா..?
தமிழக அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பல்வேறு செயல்களை செய்து வருகிறது. அந்த வகையில், சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. அதில், பங்கெடுத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஆரியமும் சமஸ்கிருதமும் தான் இந்தியாவின் மூலம் என்னும் கற்பனையை வரலாறாக சொல்லி வந்தனர். அதை. மாற்றியது சிந்துவெளி நாகரிகம் குறித்த மார்ஷலின் ஆய்வுகள் தான்” எனவும், “சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது, அங்கே பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என அவர் நூற்றாண்டுக்கு முன் கூறியது தற்போது வலுப்பெற்றுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிந்து வெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்கா டாலர் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.























