தமிழக அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்த வேண்டும் என பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
சுழற்சி முறை பணி:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வருகிறது. இந்த நோய் தாக்கத்தினால் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக கோவில்கள், உணவகங்கள் போன்றவற்றிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழலில் அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என பணியாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தமிழக தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகி உள்ளது. மாநில அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நோய் கட்டுக்குள் வரவில்லை.
கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
தலைமை செயலகம் மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் சென்னையின் அண்டை மாவட்டங்களில் இருந்து மின்சார ரயில் மூலமாகவோ, பேருந்துகள் மூலமாகவோ பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 100க்கும் மேற்பட்ட தலைமை செயலகத்தின் அலுவலக பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு தலைமை செயலக ஊழியர்கள் உட்பட அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
Welder 4 years experience
BA. B.TECH ENGLISH TEACHER 2 YEARS EXPERIENCE