கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
அசாம் மாநிலத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா தொற்றின் வேகம் உயர்ந்து வந்ததால் அங்கு 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளிகளின் நுழைவு வாயிலில் கூட்டம் ஏற்படாத வகையில் மாணவர்களுக்கான வகுப்பு நேரங்களில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. முன்னதாக கொரோனா தாக்கம் துவங்கின போதே 1 முதல் 5 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
ஏப்ரல் 28ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு – எம்எல்ஏ அறிவிப்பு!!
இதனால் அம்மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பிலிருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சிராங், பிஸ்வநாத், பாஸ்கா, மஜூலி, டிமா ஹசாவ், சராய்டியோ, ஹைலகண்டி, தெற்கு சல்மாரா ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று 100க்கும் மேல் பதிவு செய்யப்படுகிறது. அதனால் அந்த மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அசாம் மாநில அரசு.