ஏப்ரல் 28ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு – எம்எல்ஏ அறிவிப்பு!!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால் நாளை (ஏப்ரல் 28) மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. நோய்த்தொற்று காரணமாக ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். பலி எண்ணிக்கையும் வழக்கத்தை விட சற்று உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் தினசரி பாதிக்கப்படுபவர்களில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேஷ், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இந்த மாநிலங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக பத்தாயிரத்துக்கும் மேல் புதிய தொற்று பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த மாநிலங்கள் உட்பட நோய்த்தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, பொதுமுடக்கம் உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகராட்சி பகுதியில் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் மேயர் சிரிஷா, ஆணையாளர் கிரிஷா, எஸ்.பி.வெங்கட அப்பல் நாயுடு கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
CBSE 10, 12ம் வகுப்பு கேள்வித்தாள்களில் மாற்றம் – புதிய கல்வியாண்டில் அறிமுகம்!!
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்எல்ஏ கருணாகர ரெட்டி, ‘திருப்பதி மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஏப்ரல் 28) திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். தவிர இந்த பொது முடக்கத்திற்கு வணிகர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு தெரிவித்ததாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.