CBSE 10, 12ம் வகுப்பு கேள்வித்தாள்களில் மாற்றம் – புதிய கல்வியாண்டில் அறிமுகம்!!
திருத்தப்பட்ட கல்விக்கொள்கையின் அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்சி கேள்வித்தாள்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
திருத்தப்பட்ட கல்விக்கொள்கை:
இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அனைத்து மாணவர்களுக்கும் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 34 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் கல்விக்கொள்கை 21 ஆம் நூற்றாண்டில் புதிய கல்விக்கொள்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல சிபிஎஸ்சி கல்வியிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட கல்விக்கொள்கை மூலமாக சிபிஎஸ்சி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கேள்வித்தாள்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தபட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த திருத்தப்பட்ட கல்விக்கொள்கையில் பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் திறன் அடிப்படையில் 30% கேள்விகள் கேட்கப்படும். அதே சமயம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் 20% மதிப்பெண்களுக்கு திறன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்தியாவில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 2,771 பேர் பலி!!
மேலும் இந்த திறன் அடிப்படை கேள்விகள் அன்றாட வாழ்க்கை முறை அடிப்படையில் இருக்கும். இந்த சிபிஎஸ்சி கல்வி முறையில் திருத்தப்பட்ட கல்விக்கொள்கை மாற்றங்கள் அடுத்த 2021-2022 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிபிஎஸ்சி பாடங்களில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.