இந்தியாவில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா – ஒரே நாளில் 2,771 பேர் பலி!!
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3.23 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர நோய் பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,771 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் நோய் தாக்கத்துக்கு ஆளாகுகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும் பாதிப்பு குறையவில்லை. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் கூடிய பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று காரணமாக மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களில் தினமும் 2 ஆயிரம் வரை இறப்பு ஏற்படுகிறது. இதில் சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆச்சிஜன் குறைபாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கபட்டவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி,
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி பாடங்கள்!!
- கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்று ஒரே நாளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இதனால் பலி எண்ணிக்கை 1,97,894 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,19,272 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,45,56,209 ஆக உயர்ந்துள்ளது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2,8,13,658 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
- இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.62% ஆகவும், உயிரிழந்தோர் சதவிகிதம் 1.12% ஆகவும், சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.34% ஆகவும் அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 14,52,71,186 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.