பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஜூன் 10ல் தொடங்கும்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவங்களான பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் 2020
தமிழகத்தில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.
SSLC தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே ! – புதிய விதி ??
கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதால் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதன் பின்னரே வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் அறிவித்து உள்ளார். இதனால் மாணவர் சேர்க்கையினை ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக ஜூன் 10ல் தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |