தமிழக நிறுவனங்களுக்கு ஏப்ரல் 6ல் சம்பளத்துடன் விடுமுறை – ஐகோர்ட் உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி அன்று நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஐகோர்ட் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
மேலும் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதியடத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் துறை ஆணையர் அவரகள் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷாஜகான் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாள் (ஏப்ரல் 6) அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்