தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற பொதுமக்களின் குழப்பத்திற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
இரண்டாம் அலை:
தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனாவின் முதல் அலை கடந்த ஆண்டு இறுதி முதல் குறையத் தொடங்கியது. இதனால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுத்தப்பட்டது.
டாடா குழும ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அதிரடி அறிவிப்பு!!
அதிக தாக்கம்:
திடீரென்று நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் அதிக கவனமுடன் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலாளர்:
தமிழகத்தில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி உள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மக்களின் குழப்பங்களை நீக்கும் வகையில் பதிலளித்துள்ளார். அதன்படி, “தமிழகத்தில் முழு ஊரடங்கு அம்பலப்படுத்தப்படாது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட தெருக்கள், வீடுகளில் மட்டுமே ஊரடங்கு செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மினி ஊரடங்கு முறை தான் அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு என்று பரப்பப்படும் யூகங்களை நம்ப வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
12 th leave uduga mam
Ple………………….. .. ……😭😭