தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை – தேர்தல் ஆணையம்!!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கொண்டாட்டங்களுக்கு தடை :
கொரோனா இரண்டாம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசுகள் பகுதி நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள கொரோனா பரவலை கருத்திற்கொண்டு நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வுகளை நடத்தி அதன் மூலம் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா பரவல் மத்தியில் தேர்தலானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கட்சிகளுக்கு கொரோனா விதிமுறைகளை கூறி அதை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று முடிந்தது. அதன் முடிவு வருகின்ற மே 2ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
மேலும் தற்போது தீவிர கொரோனோ பரவலுக்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துளள்னர். அரசியல் கட்சிகளின் பேரணி மற்றும் பொது கூட்டங்களே கொரோனா இரண்டாம் அலைக்கு காரணம் என சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மே 15 வரை இந்தியாவுக்கான விமான சேவை ரத்து – ஆஸ்திரேலியா அறிவிப்பு!!
இதை கருத்திற்கொண்டு தேர்தல் ஆணையம் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. வெற்றி பெற்ற கட்சிகள் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டார்கள். எனவே, இதன் காரணமாக தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்