மே 15 வரை இந்தியாவுக்கான விமான சேவை ரத்து – ஆஸ்திரேலியா அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக மே 15 வரை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லக் கூடிய அனைத்து பயணிகள் விமானங்களையும் ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து:
கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா உயிர் கொல்லி நோயுடன் போராடி வருகின்றன. இந்த இரண்டாம் அலை கொரோனா தொற்று முதல் அலையை விட அதிக வீரியத்துடன் பரவுகிறது. இதனால் உலக சுகாதாரத்துறை அனைத்தும் நாடுகளுக்கும் பல்வேறு வகையான அறிவுரைகளை வழங்கி வருகிறது.
மேலும் நாடுகள் அனைத்தும் ஊரடங்குகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகின்றன. தற்போது உள்ள நிலை தொடர்ந்தால் நாடுகள் அனைத்தும் மோசமான நிலைமையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டு பயணத்தை குறைக்க போக்குவரத்தை ரத்து செய்து வருகின்றன உலக நாடுகள்.
தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அரசு மே-15 தேதி வரை இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்