தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை-சென்னை இடையேயான சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை உயர்த்து வருவதால் ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டு வருகிறது. மக்களை நடமாட்டத்தை கட்டுப்படுத்த இவ்வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் தெற்கு ரெயில்வே 16 பயணிகள் சிறப்பு ரயில்களை ரத்து செய்தது.  மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் வெளி மாநில பயணங்களை குறைப்பதற்கும் ரயில்வே துறை இவ்வறிவிப்பை வெளியிட்டது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடல் – ஆசிரியர்க்கு கொரோனா தொற்று எதிரொலி!

தற்போது கன்னியாகுமரி-ராமேஸ்வரம், கோவை-பெங்களூரு, சென்னை-மைசூரு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் கோவை-சென்னை இடையேயான சதாப்தி ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!