தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு – அரசு ஆலோசனை!

0
தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு - அரசு ஆலோசனை!
தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு - அரசு ஆலோசனை!
தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு – அரசு ஆலோசனை!

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது சேவை மின்கட்டணமானது குறைக்கப்படுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

மின் கட்டணம் குறைப்பு:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 2022 முதல் மின் பயன்பாட்டிற்கான கட்டணமானது 10 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மோட்டார் பயன்பாடு, லிப்ட், பொதுநடைபாதை, பொது சேவை மின்கட்டணங்கள் போன்ற அனைத்தும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Follow our Twitter Page for More Latest News Updates

அதன்படி ஒரு யூனிட் ரூபாய் 8 மற்றும் நிரந்தர கடனமாக கிலோவாட்டிற்கு 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் மக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும், கடந்த ஜூலை மீண்டும் பொது சேவை மின்கட்டணம் ஒரு யூனிட் ரூபாய் 8.15 ரூபாய் ஆகவும், நிரந்தர கட்டணமாக கிலோவாட்டிற்கு ரூபாய் 102 நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த மின் கட்டணத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் நாளை (செப்.13) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

இதனால் பத்துக்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது சேவை மின்கட்டணத்திற்கு குடியிருப்பு பயன்பாட்டிற்கான பிரிவிலேயே மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விரைவில் மின்கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!