தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – தலைமை செயலர் வெளியீடு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கொரோனா மையங்களாக மாற்றப்பட வேண்டும் என தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா மையங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 11 ஆயிரம் வரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகரித்து வரும் நோய் பரவலை தடுக்க மாநில அரசு திணறி வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பேருந்துகளிலும் மக்கள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்ப கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு ? – மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆச்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் இறக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை கொரோனா மையங்களாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கொரோனா மையங்களிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.