பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

0
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழகம் விடுமுறை:

புதுச்சேரியில் கொரோனா இரணடாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

ஆனால் ஆய்வக படிப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றன. மேலும் அவர்களுக்கு விடுதியும் வழக்கம் போல் இயங்கின. இந்நிலையில், கொரோனா தாக்கம் கைமீறி போன காரணத்தினால் தற்போது புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 24) முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

மேலும் அந்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளை ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக விடுதிகளும் செயல்படாது என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!