இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 23) ஆலோசனை நடத்த உள்ளார். இதில் நோய் தட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மோடி ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு லட்சங்களை தாண்டி உயர்ந்து வருகிறது. ஒரு நாளில் சராசரியாக 3 லட்சம் பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இதுவரை கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அதனால் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தால் இறப்புகள் ஏற்படுகிறது என புகார்கள் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு – பிரதமர் மோடி உத்தரவு!!
இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வரும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 23) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மதியம் 12:30 மணியளவில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.