3 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் – தமிழகம் வருகை!!
கொரோனா தடுப்பு 3 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளை மத்திய அரசு தமிழகத்திக்கு அனுப்பியுள்ளது. இதை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் பணி துவங்க உள்ளது.
கோவிஷீல்டு மருந்துகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவல் வேகமாக பரவி வருகிறது. அதிக தொற்று எண்ணிக்கை உள்ள மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முக்கிய இடத்தில இருந்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்பட்டும் என அறிவித்திருந்தது.
ஏற்கனவே தமிழக அரசு 1.5 கோடி கொரோனா தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய மருத்துவ கழகத்திற்கு ஆணையிட்டு இருந்தது. இதுவரை தமிழகத்திற்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மொத்தமாக 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ்கள் வந்து சேர்ந்துள்ளன. தடுப்பூசி நிறுவனங்களிடம் மாநில அரசுகளே நேரடியாக தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி – ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
அதன்படி இன்று காலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அந்த 3 லட்சம் தடுப்பு மருந்துகளும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70 லட்சத்து 85 ஆயிரத்து 720 டோஸ்களாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்தடைந்த மருந்துகளை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் பணி இனிமே சற்று நேரத்தில் துவங்க உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்