தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி – ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் தடுப்பு பணிக்காக மருத்துவ பணிகள் கழகத்திற்கு ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வரும் மே மாதம் 12 ம் தேதி வரை பணியை தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தினசரி எதிர்பாராத அளவு உயருகிறது. நாள் ஒன்றிற்கு 15,000 பேர் பாதிக்கப்படுகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில், படுக்கைக்குகளுக்கும் சுவாச கருவிகளுக்கும் அதிக பற்றாக்குறை நிலவுகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா சிகிக்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அரசு பல்வேறு கலந்துரையாடுகள் மூலம் பல முடிவுகள் எடுத்து பொதுமகக்ளுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பிரிவுகளுக்கு புதிய பணியாளர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மருத்துவ கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா – உலகளவில் முதலிடம்!
இதனை தொடர்ந்து தற்போது மாநில அளவில் மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு பிரிவில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாாிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனாமிகா ரமேஷ் கவுரவ் குமார், கட்டா ரவி, தேஜா, ஐஸ்வர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிராணவாயு இருப்பு, மருந்துப்பொருட்கள் அளவு, மருத்துவ படுக்கை வசதிகள் இருப்பு போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தொடர்ந்து அதை கண்காணிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அணைவரும் மே 12ம் தேதி வரை தனக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை மருத்துவ கழகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்