தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – 11 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உயரதிகாரிகள் கொண்ட 11 குழுக்களை தலைமை செயலர் அமைத்துள்ளார்.
கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,652 ஆகும். நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பொழுது பொதுமக்கள் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளிகள் கடந்த ஆண்டில் நடைபயணமாக ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனை தவிர்ப்பதற்காக தமிழக தலைமை செயலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட 11 குழுக்களை அமைத்து உள்ளார்.
தமிழக தொடக்க கல்வி மாணவர்களுக்கு வகுப்புகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!
குழுக்கள்:
- நோய் தடுப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கும் குழுவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, கிருஷ்ணன், செந்தில்குமார், பங்கஜ்குமார் பன்சால், சந்தோஷ் கே மிஸ்ரா, ஐ.பி.எஸ்., அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- நோய் பரவல் மற்றும் தடுப்பூசி பணிகளை கண்காணிக்கும் குழுவில், ஐ..ஏ.எஸ்., அதிகாரிகள் கோபால், சந்திரமோகன், சிவஞானம் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் இடம் பெற்றுள்ளனர்.
- தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், நோய் தடுப்பு நடவடிக்கை குழுவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உமாநாத், சித்திக், ஜெகநாதன், ஐ.பி.எஸ்., அதிகாரி திருநாவுக்கரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- பாதுகாப்பு மையம் ஏற்படுத்துதல், சுகாதார மேம்பாடு குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவாசன், கார்த்திக், கார்த்திகேயன், மருத்துவ சேவைகள் இயக்குனர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் நகர்வுக்கான குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முருகானந்தம், அருண்ராய், அனு ஜார்ஜ், அனிஷ் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியை ஒருங்கிணைக்கும் குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தயானந்த் கட்டாரியா, ககன்தீப் சிங் பேடி, ஐ.பி.எஸ்., அதிகாரி தாமரை கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பிரபாகர், ஜவஹர், சமயமூர்த்தி; நிவாரணப் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கிருஷ்ணன், பணீந்திரரெட்டி, தீரஜ்குமார், ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
- தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள்; பிற மாநிலங்களில் உள்ள, தமிழக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நசிமுதீன், அபூர்வா, மைதிலி ராஜேந்திரன்; ஐ.பி.எஸ்., அதிகாரி விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ, ஐ.ஏ.எஸ்., அதிகரிகள் ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜய ராஜ்குமார், மதுமதி; ஊடகங்கள் ஒருங்கிணைப்புக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன், தீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.
ஆலோசனை:
முன்னதாக 8 குழுக்கள் நோய் தடுப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிதாக 3 குழுக்களையும் அமைத்து மொத்தம் 11 நோய் தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு குழுக்களை தலைமை செயலர் நியமித்துள்ளார். தலைமை செயலகத்தில் இந்த 11 குழுக்களை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்