
TN Budget 2025 Live : சாமானிய மக்களுக்கு 25,000 புதிய வீடுகள் கட்டப்படும்.., மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு தாக்கல் செய்யும் நிறைவு பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய மாற்றம்..!! இத எதிர்பாக்கலைல..!!
அதாவது, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் 2025-26 நிதியாண்டில் சாமானிய மக்களுக்கு 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும், இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 25,000 புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடனுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.























