பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி ??? – மேலும் 2 வாரம் ஒத்திவைப்பு !

0
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி ??? – மேலும் 2 வாரம் ஒத்திவைப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி – மேலும் 2 வாரம் தள்ளி வைக்க உள்ளதாக பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. அதில், பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும்முடிந்து விட்டன. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பிளஸ் 1க்கு, மட்டும் ஒரு தேர்வு நடைபெற வேண்டியுள்ளது.

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை 

தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், போக்குவரத்து வசதி இல்லாததால், ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் எற்படுள்ளது. மேலும் .’இ – பாஸ்’ அனுமதி கிடைக்காததாலும் கொரோனா பாதிப்பால், மாவட்ட எல்லைகள், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால், சொந்த வாகனங்களில் பணிக்கு செல்ல முடியவில்லை.இந்நிலையில், வரும், 27ம் தேதி விடை திருத்தம் துவங்கினால், 50 சதவீதஆசிரியர்கள் கூட பணிக்கு வர முடியாது. எனவே, ஊரடங்கு முடிந்ததும் விடைத்தாள் திருத்தத்தை துவங்கலாம் என பள்ளி கல்வி துறை ஆலோசித்து வருகிறது.

தேர்வு முடிவுகள்:

இதற்கிடையில், விடைத்தாள் திருத்த பணியை, இரண்டு வாரம் தள்ளி வைக்க, பள்ளி கல்வி துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் தான் உயர்கல்வி சேர்க்கை துவங்கும்; அதற்கு, ஜூலை, 15க்குள் தேர்வு முடிவு களை அறிவித்தால் போதுமானது.

எனவே, ஜூன், 8ல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்கினால்,அந்த மாத இறுதிக்குள் முடிவுகளை வெளியிட வாய்ப்புஉள்ளதாக, பல்வேறு முதுநிலை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் வரை, விடைத்தாள் திருத்தப் பணிகள் தள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!