பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம் – ஏப்., 8ம் தேதி நிறைவு!

0

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம் – ஏப்., 8ம் தேதி நிறைவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த தேர்வை 9 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் :

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். மாணவர்களுக்கான பொது தேர்வுகள் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12,606 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு தமிழ் மற்றும் இதர மொழி பாடங்களுக்கான தேர்வுகளும் இன்று நடைபெற உள்ளது. தேர்வின் போது வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 நிமிடம் இந்த தேர்வில் உண்டு. இந்த தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!