திருப்பதிக்கு செப். 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் 2 முறை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருப்பதி கோவிலில் 2 முறை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக செப். 17 ஆம் தேதி முதல் செப். 30 ஆம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க உத்தியோகம் வேண்டுமா? உங்களுக்காகவே தான் இந்த பதிவு.. உள்ளே வந்து பாருங்க!
அதில் இந்த வருடம் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோத்சவம் திருவிழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு முதலில் வரும் திருவிழாவிற்காக வரும் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் www.tnstc.in, டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.