திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.. காத்திருப்பு நேரம் அதிகரிப்பு – காரணம் இதுவா?
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது
திருப்பதி
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக கடந்த 10 நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் தேவஸ்தானம் தரிசனம் செய்வதில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அதிக நேரம் ஆக என்ன காரணம் என்பது குறித்த விளக்கம் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யணுமா? – இத ஃபாலோ பண்ணுங்க போதும்!
அதாவது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுவதால், தரிசன நேரம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கியூ வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.