திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் புதிய உத்தரவு!
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் கோவிலில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்க தடை:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு மக்கள் 6 நாட்கள் கடும் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவர். கடந்த 2 வருடங்களாக இந்த கந்த சஷ்டி விழா கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை.
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டு பாதிப்புகள் ஏதும் இல்லாததால் கட்டுப்பாடுகள் இன்றி விழா சிறப்பாக நடைபெற்றது. எப்போதும் சஷ்டியின் போது பக்தர்கள் கோவிலில் தங்கி சுவாமி வழிபாடு செய்வர். மேலும் இந்த நாளில் தங்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு சஷ்டியின் போது கோயில்களில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டது.
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இது குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சஷ்டியின் போது கோயில் பிரகாரங்களில் பக்தர்கள் தங்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டு கோயில்கள் வரலாற்றின் சான்றுகள் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் தனிநபர்கள் யாகம் நடத்தவும் நிரந்தர தடை விதிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.