இந்தியன் ரயில்வேயில் இளைஞர்களுக்கான டிக்கெட் விற்கும் வேலை – அறிவிப்பு வெளியீடு!
ரயில்வே நிர்வாகம் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு டிக்கெட் விற்கும் வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியாகியிருந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்கும் வேலை:
நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் என பெரும்பாலான பயணிகள் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். மேலும், ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால், டிக்கெட் கவுண்டர்களின் டிக்கெட் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. இதனால், டிக்கெட் கவுண்டர்களில் வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் வேலையை வேலையில்லாமல் சுற்றி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், முதலில் இந்த திட்டத்தை நகர்ப்புறங்களில் செயல்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு ரெயில்வேயில் முதலில் இளைஞர்களுக்கு டிக்கெட் வழங்கும் வேலை வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிக்கெட் வழங்கும் வேலைக்கு 18 வயது நிரம்பிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 27ம் தேதி ‘இந்த’ மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும், டிக்கெட் வழங்கும் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரெயில்வே நிர்வாகமே இடம், மின் இணைப்பு ஆகிய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பணியில் இளைஞர் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ஆகிய டிக்கெட்களை விற்பனை செய்ய வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு அந்த இளைஞருக்கு கமிஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I’m completely in college