தமிழகத்தில் வருகிற 27ம் தேதி ‘இந்த’ மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் வருகிற 27ம் தேதி 'இந்த' மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வருகிற 27ம் தேதி 'இந்த' மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வருகிற 27ம் தேதி ‘இந்த’ மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மேலும் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தொற்றினை கட்டுப்படுத்த ஊரடங்கு, பொது முடக்கம், போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் நாட்டில் பாதி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வறுமை அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலை பார்த்தவர்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்துள்ளதால் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பினை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் தற்போதைய தமிழக அரசு புதிய தொழில் ஒப்பந்தங்கள் பலவற்றில் கையெழுத்திட்டு வேலைவாய்ப்பினை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீனதயாள் உபத்யாய கிராமீன் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் வட்டாரத்தை சோ்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Whatsapp குரூப்பில் வந்துள்ள புது வித அப்டேட் – மற்றவரின் செய்தியை அட்மின் நீக்கலாம்!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த பயிற்சி முகாமில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகளை வழங்கி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிக்கான தேர்வு வருகிற 27ம் தேதி ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!