தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத் துறையில் காலிப்பணிகள்
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் :
14 சமையலர் பணிகள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்
ஊதிய விவரம் :
செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 50000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 26.03.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்