தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காய்கறி விலையை கண்டு பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அரிசியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்து காணப்பட்டது.
எனவே ஆந்திரா, கர்நாடக வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் தங்களுக்கு தேவையான நெல்லை வாங்கி சென்று கொண்டுள்ளனர்.வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
வேலைக்கு போகாமல் மாதம் சம்பளம் வேண்டுமா? – அஞ்சல் துறையின் சூப்பர் திட்டம் இதோ!