ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
தமிழக ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
ராமநாதபுரம் மாவட்ட போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படையில் மீனவ இளைஞர்கள் இணைந்து குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கோயில் விழாக்கள், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான ஊர் காவல் படை (இருபாலரும்), மீனவர் இளைஞர் கடலோர பாதுகாப்பு படையில் (ஆண்கள் மட்டும்) பணிபுரிய தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்கள் பிப்.11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிப்.11ல் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடற்தகுதியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள இளைஞர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வர வேண்டும். கடலோர பாதுகாப்பு படையில் சேர்வதற்கான பயிற்சியில் கடலோர மீனவர் கிராம மீனவ இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத் தில் பிப்.1 முதல் விண்ணப்பங்களை பெற்று பிப்.11 க்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதிரடியாக உயரும் அரிசி விலை – அதிருப்தியில் மக்கள்!