போனா வராது பொழுது போன கிடைக்காது..! ஆதார் அட்டையை புதுப்பிக்க இதுதான் சரியான வாய்ப்பு..!
இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக இருந்து வருகிறது. அதாவது, அரசு அலுவலகம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் ஆகும். இந்தியாவில் சுமார் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டையை பெற்றுள்ளதாக ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 10 வருடத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் பணியை செய்து வருகிறது.
மகளிருக்கு ஹாப்பி நியூஸ்…!! “இந்திய முதன்மை வங்கியில் புதிய திட்டம் அறிமுகம்”..!!
அதன் அடிப்படையில், அரசு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் பணிக்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14 தேதி வரை நீட்டித்துள்ளது . மேலும், 14 தேதிக்கு பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பிக்க முடியும் என்று ” UIDAI ” தகவல் தெரிவித்துள்ளது.



























