ஆவின் பால் வாங்குவோர் கவனத்திற்கு.. இனி இந்த மாற்றம் வர போகுது – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் இனி மாற்றத்தை பார்ப்பீர்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
ஆவின் பால்
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவினில், சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆவின் நிறுவனம் மூலமாக நாள்தோறும் சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் மூலமாக பால் மட்டுமில்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் – பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் ஆவின் நிறுவனம் பற்றி பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவினில் இனி மாற்றத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது
Exams Daily Mobile App Download