
திருப்பதி செல்வோர் திட்டமிடுவோர் கவனத்திற்கு.. ஐஆர்சிடிசி வழங்கும் ஸ்பெஷல் டூரிஸம் பேக்கெஜ் – முழு விவரம்!
இந்தியாவில் உள்ள முக்கிய கோவிலான திருப்பதிக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஸ்பெஷல் டூரிஸம் பேக்கெஜை ஐஆர்சிடிசி வழங்குகிறது.
ஐஆர்சிடிசி அறிவிப்பு:
ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள். தற்போது கோடை முறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக ஐஆர்சிடிசி டூரிஸம் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு வசதிக்கு பஞ்சதேவாலயம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சதேவாலயம் சிறப்பு பேக்கேஜ் மூலம், காணிபாக்கம், திருச்சானூர், திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீனிவாச மங்காபுரம் ஆகிய ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
தமிழகத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – ஜூலை 15 கடைசி நாள்!
மேலும் இந்த முக்கியமான 5 கோவில்களும் ஒரே பேக்கேஜ்ஜில் வருவதால் பக்தர்கள் இன்பஅதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த பேக்கேஜ் ஒரு இரவு 2 பகல்களை கொண்டது. திருப்பதியில் இருந்து தினமும் இந்த பேக்கேஜ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பஞ்ச தேவாலயம் டூர் பேக்கேஜ் திருப்பதி ரயில் நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் தொடங்கும். திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் இந்த ஒரே பயணம் புக் செய்தால் 5 கோவில்களை பார்க்கலாம்.
இந்த பேக்கேஜ் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகளுக்கு ஐஆர்சிடிசி ஊழியர்கள் காலை 7 மணிக்கு பயணத்தை தொடங்குவார்கள். அதன் பின் தாங்கும் விடுதிக்கு அழைத்து சென்று, காலை உணவு வழங்குவார்கள். பின் சீனிவாச மங்காபுரம் மற்றும் காணிபாக்கம் கோயில்களுக்கு அழைத்து செல்வார்கள், பின் மதிய உணவு வழங்கப்பட்டு அதனை தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். பின் இரவு திருப்பதியில் தங்க வைத்து, இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு சிறப்பு நுழைவு தரிசனம் மூலம் திருமலை உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் பின் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த ஐஆர்சிடிசி பஞ்சதேவாலயம் டூர் பேக்கேஜ் 5,170 ரூபாய் ஆகும். இதில் இரட்டை பகிர்வுக்கு 5,370 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த பேக்கேஜில் ஒரு நாள் ஹோட்டல் தங்குமிடம், ஏசி வாகனத்தில் தளம் பார்ப்பது, திருமலையில் சிறப்பு நுழைவு தரிசனம், திருச்சானூர், ஸ்ரீநிவாச மங்காபுரம், காணிபாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி கோவில்களில் தரிசனம், காலை உணவு, பயணக் காப்பீடு என அனைத்தும் அடங்கும்.