
உங்களுக்கு தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லம் பற்றி தெரியுமா…?? இதுல சலுகைகள் நிறைய இருக்கு…வாங்க படிக்கலாம்
தமிழ்நாடு அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் தொடங்கப்பட்ட “சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச தங்குமிடம், உணவு, உடை மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.
Today Gold Rate: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை..!! அதிரடி விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!
மேலும், இதில் குழந்தைகளுக்கு தரமான கல்வியும் வழங்கப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் இல்லாத குழந்தைகள் அல்லது ஒற்றை பெற்றோர் அல்லது மாற்று திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளும் பயனடையலாம். குறிப்பாக, ஆதார் அட்டை, பிறந்த சான்று மற்றும் வருமான சான்று ஆகியவை இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட சமூக நல அலுவலரிடம் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதுமான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























