அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. விவரம் உள்ளே!!
திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆணைக்கு எதிராக இந்த இரு அமைச்சர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஓணத்தை ரத்து செய்த கேரள அரசு..! பாதிப்படையும் தமிழக வியாபாரிகள்..!!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்பொழுது மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
























