ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள சூப்பர் திட்டம் – இனி யாரும் ஏமாற வேண்டாம்!
ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பலவகையான நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் அதிக அளவிலான பலன்களை பெற்றுள்ளனர்.
சூப்பர் பலன்கள்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக பல சிறப்பு உதவி திட்டங்களையும் அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி, கோதுமை போன்ற பொருட்களை வழங்கி வந்தனர். இதனால் ஊரடங்கு காலத்தில் அன்றாட உணவுக்கு கூட சிரமப்பட்டு வந்த மக்கள் அரசின் உதவியால் தினசரி உணவை மக்கள் உண்ண முடிந்தது.
நகரில் 50 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கம் – ஜனவரி 14 முதல் தொடக்கம்!
இந்நிலையில், தற்போது அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் டிசம்பர் மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதன் மூலம் மக்கள் நாட்டின் எந்த மூலையிலும் இருந்து ரேஷன் பொருட்களையும் பெற முடியும். மேலும், அலைகளில் இருந்து பொருட்கள் வெளியேறுவது முதல் மக்களுக்கு சென்று சேருவது வரை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.