நகரில் 50 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கம் – ஜனவரி 14 முதல் தொடக்கம்!
மும்பை நகரில் ஜனவரி 14ம் தேதி முதல் முதல்கட்டமாக எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டபுள் டக்கர் பேருந்துகள்:
பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறையானது தற்போது நகரின் மாசை குறைப்பதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகளின் ஒரு பகுதியாக, நகரில் ஜனவரி 14ம் தேதி முதல் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதாகவும், உடனடியாக பணிகள் முடிக்கப்படும் என்றும் பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதிலும், ஜனவரி 14 அன்று 10 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளதாகவும், அதன்பிறகு முதல் கட்டத்திலேயே 50 ஆக அவை உயர்த்தப்படும் என்றும், அடுத்த ஜூன் மாதத்திற்குள் அவை 500 எலக்ட்ரிக் பேருந்துகளுடன், டாக்சிகளையும் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பேருந்துகளில் இருக்கையை சலோ செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.