அரசு பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு – முதல்வர் அறிவிப்பு!
புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு:
டிசம்பர் 3ம் தேதியான இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு ஊக்கமளிக்கும் செய்திகளையும், அவர்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதிய தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் ஊர்க்காவல் படை பணிக்கான அரசாணை ரத்து செய்யப்படுமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
Exams Daily Mobile App Download
இதேபோல், புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு புதுவை அரசு கூடுதலாக 25% நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளி கர்ப்பிணிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.