
“FD வாடிக்கையாளர்களே ஓர் நற்செய்தி…!!” வட்டி விகிதம் திடீர் உயர்வு..!! ரிசர்வ் வங்கியின் அதிரடி தகவல்…
ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், இந்த கூட்டத்திற்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்பு தொகைக்கான (FD) வட்டி விகிதங்களை உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், எந்தெந்த வங்கிகள் FD ன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன மற்றும் தற்போது எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது குறித்து கீழே விரிவாக பாப்போம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
303 நாட்களுக்கான வைப்பு தொகைக்கு 7% வட்டியும், 400 நாட்களுக்கு 7.25% வட்டியும், 506 நாட்களுக்கு 6.7% வட்டியும் வழங்குகிறது. மேலும், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 3.5% லிருந்து 7.25% வரை வட்டி விகிதங்கள் அளிக்கிறது.
375 நாட்களுக்கான வைப்பு தொகைக்கு 7.5% வட்டி விகிதம் வழங்குகிறது. மேலும், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கான வைப்பு தொகைக்கு அதிகபட்சமாக 7.3% வட்டி விகிதம் அளிக்கிறது.
ஆக்ஸிஸ் பேங்க்:
3 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு தொகைக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 3% முதல் 7.25% வரை வட்டி விகிதம் வழங்குகிறது.
பெடரல் பேங்க்:
7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரை வைப்பு தொகைக்கு 3% முதல் 7.5% வரை வட்டி விகிதம் வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 8% வரை வட்டி விகிதம் வழங்குகிறது.

























