ரூ.210 முதலீடு செய்தால் மாதம் ரூ.1000 பெறலாமா||அருமையான POST OFFICE திட்டம்..!!”,முழு விவரம் உள்ளே”..!
சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் எதிர்காலத்தை வளமுடையதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் POST OFFICE பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அடல் பென்ஷன் யோஜனா திட்டமானது, ஓய்வு காலத்திற்கு பின் நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்யும் திட்டமாக உள்ளது. மேலும், இந்த திட்டத்தின் பலன் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை கீழே விளக்கமாக பார்க்கலாம்.
இனி மதுரையில் 24 மணி நேரமும் விமானம் பறக்கப்போகுது..! AAI நிறுவனம் தகவல்..!!
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்(ATAL PENSION YOJANA SCHEME):
APY திட்டத்தை தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாம். இதற்கு வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் கேட்கப்படும். மேலும், இதில் கணக்கை தொடங்க வேண்டும் என்றால் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சமாக மாதம் ரூ.210 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 18 ஆண்டுகள் ஆகும். எனவே,18 ஆண்டுகள் நிறைவானதும் ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஒருவேளை, சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்து விட்டால், ஓய்வூதியத்தை அக்கணக்கின் “நாமினி” பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபாசிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


























