PF பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி…!! செட்டில்மென்ட் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!
ஊழியர் வருங்கால வாய்ப்பு நிதி ஆணையம் (EPFO) ஆனது, ஊழியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டு வருகிறது. அதில், குறிப்பாக அட்வான்ஸ் தொகையை முன்கூட்டியே எடுக்க உதவும் ஆட்டோ செட்டில்மென்ட் முறை அறிமுகப்படுத்தியதும் அடங்கும். அந்தவகையில், தற்போது PF பணத்தை திரும்ப பெறுவதற்கான இந்த ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த வாரம் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, 60% க்கும் மேற்பட்ட அட்வான்ஸ் தொகைக்கான கோரிக்கைகள் இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, வருகின்ற மே அல்லது ஜூன் மாதத்திற்குள் PF பணத்தை UPI மூலம் எடுக்கும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், PF பணத்தை திரும்ப பெறுவதற்கான, சரிபார்ப்பு முறைகளை 27 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.


























