மணிப்பூரில் ஏற்பட்ட முக்கிய அரசியல் மாற்றம்.. மக்களவையில் எடுக்கப்பட்ட சிறப்பு தீர்மானம்..!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 3,2023 ஆம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறியதால் இரு தரப்பினர் இடையே 200 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம், கட்சி உறுப்பினர்களுக்குள் எழுந்த அதிருப்தி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ், போன்ற எதிர்ப்புகளை சமநிலைப்படுத்த முடியாத காரணத்தால் பிரேன் சிங் பதவி விலகினார்.
PF பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி…!! செட்டில்மென்ட் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!
இதை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலதற்கான புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் முடிவடைந்த நிலையில் கட்சி நிர்வாகம் யாரையும் தேர்வு செய்யவில்லை என்பதால் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் “நேற்று (02-03-2025) நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த படுவதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது”.


























