அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான முக்கிய தகவல்!!
தமிழ்நாட்டில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கான .விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலையுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும் 2025-26ம் கல்வியாண்டில் சேர நேற்று மாலை வரை 2.15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Tamil Ilakkanam Eluthupilai, Otrupilai Arithal Study Material – Free PDF Download
விண்ணப்பிப்பது எப்படி:
கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பின் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tngasa.in, http://www.tngasa.org. இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். குறிப்பாக, https://www.tngasa.in/user/register என்ற இணைப்பைக் கிளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டண விவரம்:
விண்ணப்பக் கட்டணம் – ரூ. 58/-
பதிவுக் கட்டணம் – ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை
பதிவுக் கட்டணம் – ரூ. 2/- மட்டும்
























