
பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களுக்கு தடை.. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காம் பகுதி பைசரனில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் “பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரும் பொருட்களுக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லக் கூடாது” எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


























