
5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி விடுவிப்பு…!! மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்…??
2025 -26 ஆம் ஆண்டிற்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரையின் படி மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில், 2024 ஆம் ஆண்டு பெஞ்சல் புயல், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது “ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கும் ரூ. 1554.99 கோடி கூடுதல் நிவாரண நிதியை” மத்திய அரசு விடுவித்துள்ளது.
பிப்ரவரி இறுதியில் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை.. என்ன காரணம் என்று தெரியுமா..?
மேலும், தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டில் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் ரூ. 37,906 கோடி நிவாரண நிதி வழங்க கோரியும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதையடுத்து, தற்போது ஒதுக்கப்பட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பதால் மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 15 மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 1,115 கோடி நிவாரண நிதியில், தமிழகத்திற்கு ரூ. 50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

























