
“AI செயலிகளான Chat GPT, Deep Seek போன்றவை இனி பயன்படுத்த தடை…!!” மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!
AI செயலிகளான Chat GPT மற்றும் Deep Seek போன்றவற்றை தற்போது இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த செயலிகள் மூலம் சீனர்கள் தரவுகளை கடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மத்திய அரசு இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, ‘மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த Chat GPT மற்றும் Deep Seek போன்ற AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ என எச்சரித்துள்ளது. மேலும், இதற்காக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நிதி அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும், அரசின் முக்கியமான ரகசியங்கள் கசியாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

























