‘தமிழும் சரஸ்வதியும்’ விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு – கதைக்களம் என்ன?
இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக “தமிழும் சரஸ்வதியும்” மெகாத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இன்று நாயகனான தமிழுக்கு இன்ட்ரோ கொடுத்து இருக்கின்றனர். அவரது அன்பான குடும்பத்தையும் அறிமுகம் செய்துள்ளனர்.
“தமிழும் சரஸ்வதியும்” தொடர்:
இன்று முதல் முதலாக ஒளிபரப்பாக இருக்கும் “தமிழும் சரஸ்வதியும்” மெகாத்தொடரில் நாயகன் தமிழை பற்றியும் அவரது குடும்பத்தினை பற்றிய இன்ட்ரோவை கொடுக்கின்றனர். தமிழ் மிகப்பெரிய தொழில் அதிபரின் முதல் மகன். அவரது தாய் கோதை மிகவும் அன்பானவராகவும், அதே சமயம் அவரது கணவர் நடத்தும் லேத் பேக்டரியையும் பார்த்துக் கொள்கிறார்.
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கால், வீடியோ அழைப்புகளில் டேட்டா!
தமிழுக்கு ஒரு தம்பி (கார்த்தி) மற்றும் தங்கை (காவியினி) ஆகியோர் இருக்கின்றனர். தம்பி கார்த்தி தனது அப்பா பார்க்கும் தொழிலை பார்த்து கொள்கிறார். அவரது தங்கை மருத்துவம் படிக்கும் மாணவி. காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடும் தமிழ் அன்றைய நாளில் அருகம்புல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று அருகம்புல் பறித்து வருகிறார். பின், அவரது தம்பி மற்றும் தங்கையை எழுப்பி விட்டு தனது அம்மாவிற்கு உதவுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், அவரது அம்மா கோதை அனைவருக்கும் ஜூஸ் தயாரித்து கொடுத்து விட்டு சத்தான காலை நேர உணவாக கம்பு தோசை, வரகு அரிசி பொங்கல் என்று செய்து கொடுக்கிறார். பின், இவர்களது வீட்டிற்கு அவர்களது கம்பெனியில் வேலை பார்க்கும் மேனேஜர் வருகிறார். தொழிலை தமிழ் மற்றும் கார்த்தி இருவரும் பார்த்து கொண்டாலும், அவரது அம்மா தான் முதலாளியாக இருக்கிறார். அதனால் ஒரு பைலில் சைன் செய்து சித்து கொடுக்கிறார். அப்போது கோதை தனது குடும்பமும் தனது கம்பெனியும் தான் தனது இரு கண்கள் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.