அரசு பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் கவனத்திற்கு – வர இருக்கும் புதிய வசதி!!
மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களின் வருகையை பதிவிடுவதற்கு மொபைல் செயலி ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.
வருகை பதிவேடு
தற்போது பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் தங்களின் வருகையை பதிவேடுகளின் மூலமாகவோ அல்லது பயோமெட்ரிக் கைரேகை பதிவு மூலமாகவோ பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வருகை பதிவை ஆன்லைன் மூலமாக உள்ளிடுவதற்கு மொபைல் செயலி ஒன்றை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி இந்த செயலியை பயன்படுத்தி Geo-Attendance-ஐ உள்ளிட முடியும். அதாவது இதில் ஆசிரியர்கள் தங்களின் செல்பி புகைப்படங்களை, பள்ளி கட்டிடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஆகிய தகவல்களுடன் உள்ளிட வேண்டும். அத்துடன் இதில் நீங்கள் வருகை புரிந்திருக்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே இந்த செயலியில் பள்ளி கட்டிடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த விபரங்கள் இடம் பெற்றிருக்கும். அதன்படி ஒரு ஆசிரியர் இந்த மொபைல் ஆப் மூலமாக செல்பி எடுக்கும் பொழுது இந்த அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்கள் சரியாக பொருந்த வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இதன் மூலமாக ஆசிரியர்களின் பதிவேடு சரியாக உள்ளிடுவதை உறுதி செய்ய முடியும். மேலும் இந்த முறையானது பயோமெட்ரிக் கைரேகை பதிவுடன் ஓப்பிடும் பொழுது இதற்கான செலவு மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இந்த செயலியை பயன்படுத்தி விடுமுறைக்கு விண்ணப்பிப்பது மற்றும் பணியில் இருக்கும் பொழுது வேறு இடங்களுக்கு சென்றிருந்தாலும் அதற்குரிய விபரங்களை பதிவிடவும் முடியும்.