10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – வினாத்தாள்கள் குறைப்பு & நேரம் அதிகரிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் உள்ள 11 வினாத்தாள்களை குறைத்து 6 வினாத்தாள்களாக மாற்றம் செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுகள் 3 மணி 15 நிமிடம் நடத்தப்பட உள்ளன.
பொதுத்தேர்வு மாற்றங்கள்:
தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த கல்வியாண்டின் இறுதி நாளாக மே மாதம் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 89 வேலைநாட்கள் மட்டுமே பள்ளிகள் நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வினாத்தாள்களை குறைத்துள்ளது.
தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!
இதன்படி அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஒரு தாள்கள் என 11 தாள்களை குறைத்து 6 தாள்களாக மாற்றியுள்ளனர். இது குறித்து தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், “கொரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாக்களை 11 இருந்து 6 ஆக குறைத்துள்ளது. கல்வியாண்டில் அதிகப்படியான நாட்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வினாத்தாள் கேள்விகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்படும்.
தமிழகத்தில் கிராம கவுசல்யா திட்டத்தின் மூலம் 5692 பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!!
அதன்படி முன்னர் தெரிவிக்கப்பட்ட 2 மணி நேரம் 45 நிமிடங்களிலிருந்து தற்போது 3 மணி நேரம் 15 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் 480 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 120 மதிப்பெண்களுக்கு அந்த பள்ளிகளிலேயே இன்டெர்னல் தேர்வு நடத்தப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்